1. காரிருளால் மூடப்பட்ட பர்வதங்கள் மேலே பார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜோதி தோன்றச் செய்கிறார் அதற்காக நெஞ்சமே, மகிழ்ச்சி கொள். 2. அதைத் தேசத்தார் எல்லாரும் காணச் செய்யும் கர்த்தரே அந்தகாரமுள்ள யாரும் அதால் சீராவார்களே; நீர் சகித்த சாவின் பலன் அதுவே. 3. இப்போ லட்ச லட்சமான பேர்கள் அருள் பெற்றது உம்முடைய உண்மையான அன்பினாலே ஆயிற்று; அதற்காக உமக்கே மா ஸ்தோத்திரம்.