1. பக்தரே, வாரும் ஆசை ஆவலோடும்; நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. 2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; 3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; ‘விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்!” 4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.